புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

சந்திக்க மறுத்த ஜெயலலிதா... அப்செட் ஆன சரத்குமார்

பழம்பெரும் நடிகை மனோரமா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு
அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சிறுதாவூரில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிற்பகலில் மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்த காரில் வந்தார்.

தியாகராயர் நகரில் உள்ள மனோரமா இல்லத்துக்குள் ஜெயலலிதா கார் நுழைவதற்குள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர் இல்லத்துக்குள் நுழைந்த ஜெயலலிதா கார், மனோரமா உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அருகில் சென்றது. காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் மனோரமா உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். அப்போது, அருகில் நடிகர்கள் சரத்குமார், பிரபு இருந்தனர். ஆனால், மனோரமாவின் இறப்பு குறித்து பிரபுவிடமே ஜெயலலிதா கேட்டறிந்தார். அருகில் இருந்த சரத்குமாரை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

சுமார் 3 நிமிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவைச் சந்திக்க சிலர் முயன்றனர். ஆனால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, ஜெயலலிதாவை சந்திக்க சரத்குமார் அவரது கார் அருகே சென்றார். ஆனால், ஜெயலலிதாவைச் சந்திக்க அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். இதனால் அப்செட் ஆன சரத்குமார் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருடன் மோதல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் சரத்குமாரை, ஜெயலலிதா சந்திக்காமல் சென்றது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "நான் கார் அருகில் சென்று மாண்புமிகு முதல்வரை பார்த்தேன். அதன்பின் கார் ரிவர்ஸில் போன பின்பு எடுக்கப்பட்ட புகைப்படம் அது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

ad

ad