புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2020

குடிவரவு,குடியகல்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ்

இலங்கை அரச நிர்வாகத்தை முழுமையாக பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் கோத்தாவின் நகர்வின் அடுத்த கட்டமாக குடிவரவு மற்றும் குடியகல்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவின் கீழ் அந்தத் திணைக்களம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமல் ராஜபக்ச கோத்தாவின் சகோதரர் ஆவார்.

ad

ad