புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012

வரதட்சணை கொடுக்காததால் 20 வயது பெண்ணை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடூரம்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச்
சேர்ந்த ஆனந்த் குர்மி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். 

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணம், நகைகளை ராம்கிசான் கொடுத்தார். திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு சுஷ்மிதாவை அவரது கணவரும், குடும்பத்தாரும் சித்ரவதை செய்ய தொடங்கினர். 

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். கட்டாயப்படுத்தி கர்ப்பத்தையும் கலைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரதட்சணை கொடுமை உச்சகட்டத்தை எட்டியது. சுஷ்மிதாவை ஆடு, மாடுகளுடன் அடைத்து வைத்தனர். 

கணவர், மாமனார், கணவரின் சகோதரர்கள், மற்றும் உறவினர் வீட்டு ஆண்கள் என பலர் சுஷ்மிதாவை 3 ஆண்டுகளாக கற்பழித்தனர். பல நேரங்களில் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர். ஒரே நாளில் இரண்டு, மூன்று பேர் சுஷ்மிதாவை கற்பழித்தனர். 

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு சுஷ்மிதா பக்கத்து ஊரைச் சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு விற்கப்பட்டார். இதுபற்றி சுஷ்மிதாவின் தந்தை ராம்கிசான் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

போலீசாரும், தொண்டு நிறுவனத்தினரும் சுஷ்மிதாவை பணக்காரரிடம் இருந்து மீட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ad

ad