வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகரித்த மழையினால் குருநாகல் பகுதியில் ரயில் தண்டவாளங்களை மேவி வெள்ளம் பாய்ந்து வருவதனால் நிலமை சீராகும் வரை சேவையினை மேற்கொள்ள முடியாது உள்ளது இதனால் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி பிற இடங்களில் இருந்து வடபகுதிக்கு நடைபெற்று வருகின்ற ரயில் சேவைகள் அனைத்தும் இன்றிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாக வவுனியா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று மற்றும் நாளைய தினம் பணயத்தினை மேற்கொள்வதற்கான வவுனியா புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து பணயச்சீட்டினைப் பெற்றுக் கொண்டவர்கள் வவுனியா அலுவலகத்தில் மீளவும் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பணயிகளிடமும் கேட்டுக் கொள்வதாக வவுனியா புகையிரத நிலைய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.