புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் : மு.க.ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல்,
திமுக வினர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு எழுதப்படுகிறது. அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் குற்றமற்றவர் என நிருபிக்கப்படுவார். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது.

இந்த தேர்தலை சந்திக்க திமுகவினர் மட்டுமல்ல பொதுமக்களும் எழிச்சியுடன் இருக்கின்றனர். திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும்  2 ஆயிரம் மெகா வாட் மின்சார உற்பத்திக்கான சிறப்பு திட்டங்களை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தி செயல்படுத்தி வந்தோம் ஆனால் அதனை ஜெயலலிதா விரைந்து செயல்படுத்தி இருந்தால் 2013ம் ஆண்டில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. 
திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால்தான் அதனை ஜெயலலிதா விரைந்து செயல் படுத்தவில்லை என்று ஆதாரத்துடன் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். மின்சாரத்தின் நிலை குறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 3 மணி நேரம் மின் வெட்டுக்கே தி.மு.க. விற்கு தோல்வி என்றால் 18 மணி நேரம் மின் வெட்டிற்கு எப்படி தோல்வி என்று மக்கள் வழங்க இருக்கிறார்கள். 
திமுகவினர் மீது அடிக்கடி வழக்கு போடும் ஆளும் கட்சி தவறுகளில் ஈடுபடுகின்ற மற்றும் நில மோசடியில் ஈடுபடுகின்ற அதிமுகவினர் மீது மட்டும் வழக்கு போட மறுக்கிறது. திமுகவினர் தடா பொடா குண்டர் மிசா போன்ற சட்டங்களில் சிறை சென்றவர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள் முடிந்தால் வழக்கு போட்டு பார்க்கட்டும். 
பாராளுமன்ற தேர்தலில் கட்சியினர் உற்சாகத்துடன் செயல்பட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் இல்லாவிட்டாலும் மத்திய அரசில் ஆளும் கட்சியாக நிலை நிறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ad

ad