நடிகை குஷ்பு மீதான வழக்கு : ஜனவரிக்கு ஒத்திவைப்பு
தமிழ் பெண்கள் கற்பு குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களை இழிவு படுத்தியதாக கூறி, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், 2005ம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றம், 2ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்1ல் நடக்கிறது. நேற்று குஷ்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் ஜனவரி, 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.