புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு 27-ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா
(தி.மு.க.), இளவரசன் (அ.தி.மு.க.), மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூ,) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.


இதையொட்டி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய 17-ம் தேதி கடைசி நாள். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை திரும்ப பெற 20ம் தேதி கடைசி நாள்.
27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ad

ad