புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014

இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்க
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்ததாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.ரோம் நகரில் செயல்பட்டு வரும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் என்ற அமைப்பு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பான இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிட்டது.
1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இனப் படுகொலைகள் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் வரை தொடர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை இராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் உறுதுணையாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பு 1990களில் அமெரிக்காவின் ஒரு நேசநாடு போல் இந்தியா செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தும், அமெரிக்காவும் இலங்கை இனபடுகொலைக்கு உறுதுணையாக இருந்ததுடன், இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் கூறியுள்ளது.

ad

ad