முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் பந்த்
முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழகத்துக்கு சாதகமான வகையில் உச்ச
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதால், கேரளப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதால், கேரளப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நாளை இடுக்கி மாவட்டத்தில் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து பந்த் நடத்தப் போவதாக சமரசமிதி என்ற அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், கேரளாவில் நாளை முழு பந்த் நடத்த அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், இன்று காலை தமிழகத்தின் பகுதிகளில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் பலர் கேரளப் பகுதிக்குச் சென்றிருந்தனர். இதனால் பாதுகாப்புப் பணியில் தேனி மாவட்ட எல்லை ஓரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்