சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் அளிக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
நிவாரண நிதியுதவி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தவுடன், நடிகர் ஷாருக்கான் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.