புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 தமிழ் அரசியல் கைதிகளின்
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர் களே இ்வ்வாறு தெரிவி்த்துள்ளனர்.
பொங்கல் நிகழ்வில் கலந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பதிலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாது தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி சிறிய பிரார்த்தனையும், இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அன்ரன் சகாயம் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர் கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ad

ad