புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

மிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனசம்பந்தன்.

கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக்
கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை சிதைக்கக் கூடாது. அடாவடித்தனமான - இறுக்கமான நிலைப்பாடுகள் உதவப்போவதில்லை. கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பாழடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன் கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்படவேண்டியவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றன. அந்தக் கொள்கைகளே கட்சியினால் அனைத்துத் தேர்தல்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளின் அடிப்படையிலேயே விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டார்; முதலமைச்சரானார்.
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும், துரதிஷ்டசமாக விக்னேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்தக் கொள்கைகளுடன் தன்னை அடையாளம் கண்டுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனைக் கண்காணித்து வருகின்றோம்" - என்று கூறியுள்ளார் 

ad

ad