புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு ஈழ உறவுகள் உதவி

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகள் முதல் கட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் மக்களை மையமாக கொண்ட பல பொதுப் பணி அமைப்புக்கள் முதன் முறையாக ஒன்றிணைந்து தாய்த் தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாம் கட்ட நிவாரணப் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய சைவத்திருக் கோவில் ஒன்றியம், நம்பிக்கை ஒளி THE YOUTH PROJECT, SERENDIP CHILDREN'S HOME, LOUTS CARING HANDS, ஒத்துழைப்பு,
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு,  பிரித்தானிய தமிழ் கொன்சவேற்றிவ், தொழில் கட்சிக்கான தமிழர் மற்றும் ஹில்லிங்டன் தமிழ் சமூக நிலையம் என்பன இணைந்து,
கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் மிகப் பெரிய அழிவினை ஏற்படுத்திய மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை முதலாம் கட்ட உதவியாக கடலுார் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விசூர் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மனிதாபிமானப் பணிக்காக இந்த கூட்டு அமைப்புக்களின் சார்பாக பிரித்தானிய சைவத்திருக் கோவில் ஒன்றியத்தின் தலைவர் திரு. கோபால், பிரித்தானிய தமிழர் பேரவையின் திரு. சகாதேவன், மற்றும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா ஆகியோரினால் நேரடியாக உடனடித் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.
விசூர் கிராமம் மையப்பகுதியில் 196 மண்ணெண்ணை அடுப்புகளும், விசூர் கிராமம் காலணிப்பகுதியில் 300 மண்ணெண்ணை அடுப்புகள், மற்றும் 300 பாத்திரங்களும், விசூர் கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் 120 புத்தகப் பைகள்,
மற்றும் 120 கம்பளிகளும், குடியிருப்புப் பகுதியில் 150 புத்தகப் பைகள், 150 பாத்திரங்கள், 150 கம்பளிகளும், பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் 120 புத்தகப் பைகள், 120 பாத்திரங்களும், 120 கம்பளிகளும் பெரியிருப்புப் பகுதியில் 120 பாத்திரங்களும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் நுாற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதுடன் தமிழக ஊடகங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன.
தொடர்ந்து இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்ட ஏனைய பிரதேசங்களிற்கும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் போன்ற பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் இவ் உதவிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்குரிய காலமும் இடமும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்விற்கு முழுமையான ஆதரவை வழங்கிய பிரித்தானிய வர்த்தக நிலையங்கள், சங்கங்கள், ஆலயங்கள், மற்றும் நிதி உதவிகள், வழங்கிய தனிப்பட்ட நபர்கள்,
மற்றும் நிதியைச் சேகரிப்பதற்கு உதவிய அனைத்து அமைப்புக்களின் எதிர்காலத்தில் இவ்வாறான ஒருங்கிணைந்த மனிதாபிமான பணிகளைத் தொடர அனைத்து பிரித்தானிய தமிழ் மக்களின் ஆதரவும் நேரடிப் பங்களிப்பை நல்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ad

ad