புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2016

செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்படும் ஒப்பந்தங்களில் தமிழ்பேசும் மக்கள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளன- இரா. சம்பந்தன்

“செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில்  தமிழ் பேசும் மக்கள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. தமிழ் மக்களுக்கானவை என்று
மட்டும், எந்தஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொரடந்து உரையாற்றுகையில்,
“நாங்கள் தற்பொழுது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21பேரடங்கிய வழிநடத்துக் குழு நிர்ணயிக்கப்பட்டு அதனுடைய முதல் அமர்வு இடம் பெற்று இம் மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது.
“அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம். பிரேமதாச காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மகிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாகண சபை தங்களுடைய கருத்தக்களை முன்வைத்திருக்கிறார்கள்.
அரசியல் சாசன குழ என்பது பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். இது போன்ற நிலையில் மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்திற்கு கொடுக்க இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தத் தீர்வு விரைவில் ஏற்பட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. விசேடமாக தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம். எங்களுடைய பலம் ஒற்றுமையில் தான் தங்கியிருக்கிறது. அதே விதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். உங்களுடைய பலமும் அதில் தான் இருக்கிறது.
இரண்டுக்கும் மேலாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். அந்த அதிகாரப் பகிர்வின் பெறுமதியை நாங்கள் முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.
செல்வநாயகம் அவர்கள், டட்லியுடன் செய்த ஒப்பந்தமும், பண்டா செய்த ஒப்பதந்தத்தினையும் தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார். 87 ரஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் செய்தார்கள்.
தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்றுதான் செய்தார். அஷ்ரப்பின் காலத்தில் இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்களுடன் பேசியிருக்கிறோம். நாங்கள் சில ஒப்பந்தங்களுக்கு வந்திருக்கிறோம் நீண்ட பேச்சுக்களுக்குப்பிறது. சந்திரிகாவினால் 2000 களில் முன்வைக்கப்பட் பிரேரணைகளில் அஷ்ரப் உயிருடன் இருந்த காலத்தில் பேசப்பட்ட விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
அந்த விடயத்தினைப் பொறுத்தவரையில் கூட பல கருமங்களில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுடைய உடன்பாடுகள் இப்போதும் பிரதிபலிக்கின்றதாக இருந்திருக்கின்றன. ஆகவே நீதியில், உண்மையில் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வியடத்தில், தமிழ் முஸ்லிம்கள் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். ஆகவே ஒருமித்த ஒற்றுமையினை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எங்களது கடமை. எதிர்வரும் காலத்தில் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் முன்னேறுகின்றதாக இருக்க வேண்டும்.
தேசியப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வர வேண்டும். ஜனாதிபதி இந்தக் கருமத்தில் உறுதியாக இருக்கிறார். பிரதமரும் அரசாங்கமும் இந்தக் கருமத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நாங்கள் எவருக்கும் அநீதி நடைபெறுவதை அனுமதிக்காமல் செயற்பட வேண்டும். அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad