புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2016

சேலத்தில் ஈழத்து புதுமணப்பெண் கழுத்தறுபட்டு உயிருக்கு போராட்டம் : காதலன் கைது


சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ளது பவளத்தானூர். இங்கு ஈழத்தில் இருந்து தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வு முகாம் உள்ளது. இதில், 500 -க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.  இங்கு வசிக்கும் நிகாசினி (வயது-19) என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், அப்பெண்ணை முன்பு காதலித்து வந்த வேலூர் மாவட்டத்தை சேந்த சந்திரசேகர் (வயது- 30) என்பவர் இன்று பவளத்தானூர் வந்து தனது முன்னாள் காதலியை சந்தித்துள்ளார்.  பின்பு, நிகாசினியிடம் தனியாக பேச வேண்டும் என ஊருக்கு வெளியே உள்ள ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்றவர் அங்கு வைத்து நிகாசினியின் கழுத்தை அறுத்தார்.

நிகாசினியின் சத்தம் கேட்டு ஒடி வந்த முகாம் மக்கள் சந்திரசேகரை பிடித்து தாரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நிகாசினி.

ad

ad