சுவாதி கொலை குற்றவாளி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் ராம்குமார் பேசுகிறார். சுய நினைவுடன் இருக்கிறார் என்று மருத்துவமனையின் டீன் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோபிநாத் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். அவர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார்.
நீதிபதி வருகையொட்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.