ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் கலாநிதிமாறன் - தயாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.
ஏர்செல் நிறுவன பங்குகளை மிரட்டி விற்பனை செய்ததாகவும், முறைகேடாக 740 கோடி முதலீடு பெற்றதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு இன்று மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர் ஆனார்கள்.
இதையடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.