ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன் ஜாமின் கோரி கலாநிதிமாறன், தயாநிதிமாறன், காவேரிகலாநிதி ஆகிய மூவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக 740 கோடி முதலீடு பெற்றதாக 6 பேர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்காக இன்று டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன், காவேரிகலாநிதி ஆகிய மூவரும் இன்று ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.