புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2016

அதிமுக தொண்டர்களுடன் 40 கி.மீ. நடந்து சென்ற எம்.பி. : 8 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சனிக்கிழமை காலை 8 மணி அளவில் திட்டக்குடி வைத்தியநாதர் சாமி மற்றும் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்ததோடு, இங்கிருந்து பாதையாத்திரையாக திருவட்டத்துறை அரத்துரைநாதர் கோவில், கூடலூர், இறையூர், பெண்ணாடம் உள்பட வழி நெடுக 7 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை நடத்திக்கொண்டே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினருடன் மாலை திருமுட்டம் பூவராகசாமி கோவிலுக்கு சென்று பாதையாத்திரையை முடித்தார். அந்த கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தினார். 

எம்.பி. ஒருவர் ஜெயலலிதா பூரண குணநலம் பெற திட்டக்குடியில் இருந்து திருமுட்டம் வரை 40 கி.மீ. கால்நடையாகவே கட்சித் தொண்டர்களுடன் நடந்து சென்றது மக்கள் மத்தியிலும, கட்சியினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. 

ad

ad