வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு
கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு
பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரச
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடற்தொழில் திணைக்களம் மீது தாக்குதல்
மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில்
முற்படுத்துவதற்கு முல்லைத்தீவு பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.