புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2018

ஆவா குழுவைச் சேர்ந்த நால்வர் வாள்களுடன் கைது!


யாழ்ப்பாணத்தில், இரு வேறு இடங்களில் , ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் நால்வரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்து, உரும்பிராய் பிரதேசத்தில், மோகனதாஸ் தினோஷன் மற்றும் லக்கேஸ்வரன் சமித்மன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் ​கைப்பற்றப்பட்டன.

யாழ்ப்பாணத்தில், இரு வேறு இடங்களில் , ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் நால்வரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்து, உரும்பிராய் பிரதேசத்தில், மோகனதாஸ் தினோஷன் மற்றும் லக்கேஸ்வரன் சமித்மன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் ​கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, நீர்​வேலி மேற்கு பிரதேசத்தில், கணபதி சுபாஸ்கரன் மற்றும் கந்தவேல் நிக்சன் ஆகிய இருவரும், வாள்களுடன் கைது செய்யப்பட்டரென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அவ்விருவரும், ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களென, விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இந்த நால்வரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற தாக்குதல்கள், கொள்ளை உள்ளிட்ட பல்வேறான சம்பவங்களுடன் ​​தொடர்புடையவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad