புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2018

இன்னமும் 19,000 ஏக்கர் காணிகள் படையினர் வசம்! - உறுதிப்படுத்தினார் இராணுவத் தளபத


இலங்கை இராணுவம் வட-கிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது. எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் வட-கிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது. எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் என இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு முதல் நாங்கள் எங்களை உரிய விதத்தில் தயார்படுத்த வேண்டும்.

எங்களிற்கு உட்கட்டுமான தேவைகள் உள்ளன இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்வது என்றால் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கான இடங்களை நாங்கள் அமைக்க வேண்டும். இதன் காரணமாக நான் அரசாங்கத்திடமிருந்து நிதியை கோரியுள்ளேன். எங்களிற்கு 800 மில்லியன் தேவைப்படுகின்றது. இதில் 100 மில்லியன் ஏற்கெனவே கிடைத்துள்ளது.

எனினும் நாங்கள் கோரியுள்ள முழுமையான நிதியை அரசாங்கம் இன்று தந்தால் கூட படையினரை வேறு இடத்தில் தங்க வைப்பதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு எனக்கு ஐந்து மாதங்கள் பிடிக்கும். அடுத்த ஆறு மாதத்திற்குள் நாங்கள் கோரிய நிதி எங்களிற்கு கிடைத்ததால் எங்கள் படையினர் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நான் உறுதிசெய்வேன்.

யூலை மாத இறுதிவரை இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் 65,000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது, தற்போது படையினர் சுமார் 19,000 ஏக்கர் நிலங்களில் நிலை கொண்டுள்ளனர்,வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர். கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் 2621 ஏக்கர் நிலம் மாத்திரமே தனியாரிற்கு சொந்தமானது ஏனைய நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. பொது மக்களிற்கு சொந்தமான தனியார் நிலங்களை வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இவற்றின் காரணமாக தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது,எங்கள் பிரசன்னம் தொடரும் ஆனால் நாங்கள் நிலைகொண்டுள்ள படையினரின் பிரசன்னத்தை குறைத்து கொண்டு நிலங்களை விடுவிக்கின்றோம். வடக்கில் நாங்கள் நிலை கொண்டுள்ளமைக்கு அங்கு பிரச்சினைகள் காணப்பட்டதே காரணம்,யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிகளை பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ad

ad