புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2020

பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொறேனா ரைவஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மர்ட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜயபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினரினால் பொது கட்டிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊடங்கு சட்டம் காரணமாக கொறோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் துரதிஸ்டவசமாக எதிர்காலத்தில் சமூகப் பரவலாக மாற்றமடையுமாயின் ஒவ்வொரு பிரதேசத்திலும் வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக் குறையை சமாளிப்பதற்கான முன்ஏற்பாடாகவும் குறித்த கட்டடிங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்ப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக் கட்டிடங்கள் பர்துகாப்பு தரப்பினரினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரதேசங்களில் கொறோனா வைரஸை பரப்பும் நோக்கில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுததல் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, குறுகிய நலன் கொண்ட தமிழ் அரசியல் தரப்புகளினால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சில பிரதேசங்களில் மக்களை வீதிக்கு இறக்கி தேவையற்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தி வருகின்றமைக்கு தன்னுடைய கவலையையும் தெரிவித்துள்ளார்.

ad

ad