புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2023

நிலவில் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர் - ஆய்வுப்பணிகளை தொடங்கியது..!

www.pungudutivuswiss.com

நிலவில் பிரக்யான் ரோவர், ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா, நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் அனுப்பியது. தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலம் பயணித்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. Also Read - விமானத்தில் சந்தித்த பெண்ணை கோவா ஓட்டலில் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் நபர் - அதிர்ச்சி சம்பவம் இதனை தொடர்ந்து லேண்டருக்குள் இருந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்தது. இதைப்போல லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே போன்ற கருவிகள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன. Also Read - வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு இதனிடையே பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது, அதன் சூரிய மின் தகடுகள் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை இஸ்ரோ இன்று மாலை வெளியிட்டது. Also Read - பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியை பெறுவதற்காக சோலார் மின் தகடு சூரியனை நோக்கி திரும்பியது என்றும், சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது. Also Read - அசாம்; 1 லிட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை இந்த நிலையில், பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் 8 மீட்டர் தூரத்திற்கு வெற்றிகரமாக நகர்ந்துள்ளதாகவும், நிலவில் ரோவர் தனது ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ad

ad