சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது. வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோன் கெரி இலங்கை வந்தடைந்தார் - விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம். (படம்: ராஜ்குமார்)
கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கையசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர் மஹிந்த அமரவீர, எம்.பிக்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரையும் காணலாம்.
நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: ஆண் குறிக்குள் குண்டுமணிகளை இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 , இந்த ஆவணத்தில் இருந்து சில சிறிய பகுதிகளை இங்கே தருகிறோம்.