
-
24 டிச., 2025
தையிட்டி விகாரை அமைக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை! [Wednesday 2025-12-24 18:00]
![]() யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது என , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் தெரிவித்துள்ளார். காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் |
காலி மாநகர சபை வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பதற்றம்! [Wednesday 2025-12-24 18:00] தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பில் இந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மேயர் சுனில் கமகே, சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார். 36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகரசபையில், மேயர் வெளியேறியதை அடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நகர செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மேயரின் ஆசனத்தில் அமர்ந்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார். இதன்போது 17 பேர் எதிராக வாக்களித்ததுடன், 19 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். வாக்கெடுப்பு குறித்த இறுதித் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகர சபைக்கு முன்னால் பதாதைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதேவேளை, பேலியகொடை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. தவிசாளர் கபில கீர்த்தி ரத்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிராக 9 வாக்குகளும் ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்தன. வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போதிலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயற்படப் போவதாக தவிசாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
![]() தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது |
சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்! [Wednesday 2025-12-24 18:00]
![]() இராணுவ அதிகாரியொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிறிதரனின் செயற்பாடு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்திய தீர்மானத்தை சிறிதரன் ஏதேனுமொரு வழியில் திருத்தியமைக்க வேண்டும் எனவும், அன்றேல் தாம் அவருக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார். |
யாழ். நகரில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது! [Wednesday 2025-12-24 06:00]
![]() யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவன் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர் |
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.
23 டிச., 2025
பிரியாணியை வழங்கி மாநகர சபையொன்றை ஆட்சி செய்ய முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது
ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்து 3 பேர் பரிதாப மரணம்! [Monday 2025-12-22 16:00]
![]() ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ நெடுஞ்சாலை 11ல், இந்த இரு வாகன விபத்து, ஒபசாடிக்கா பகுதியில், சுமார் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு டிராக்டர்-டிரெய்லர் லாரி மற்றும் ஒரு பிக்கப் லாரி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
22 டிச., 2025
பசியால் ‘நரமாமிசம்’ உண்ணத் துணியும் புடினின் படை – அதிர வைக்கும் ஆடியோ ஆதாரம்! Posted by By Karan
தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
21 டிச., 2025
தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மோடிக்கு கடிதம் கொடுக்க முடிவு! [Sunday 2025-12-21 17:00]
![]() தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்தும், அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்கு தமிழ்த்தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர். |
விவசாய நவீநமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்! [Sunday 2025-12-21 06:00]
![]() உலகவங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீநமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். |
பதவி கொடுக்கப்படவில்லை TVKல் இருந்து கட்சி தாவிய தாடி பாலாஜி

தமிழக அரசியலில் ஒரு பக்கம் கூட்
ரஷ்யாவின் 20 பில்லியன் பவுண்டுகள்: உக்ரைனுக்கு வழங்கும் துணிச்சலுண்டா? - போரிஸ் கேள்வி! [Saturday 2025-12-20 07:00]
![]() உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த ரஷ்ய நிதியைப் பயன்படுத்தாததற்காக போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை இரவு ஸ்டார்மர் அரசாங்கத்தைக் கண்டித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மர் 'சிறிதளவாவது துணிச்சலுடன் விளாடிமிர் புடினுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டனில் உள்ள ரஷ்யாவின் 20 பில்லியன் பவுண்டுகள் வரையிலான சொத்துக்களை ஒருதலைப்பட்சமாக முடக்கத்திலிருந்து பிரித்தானியா விடுவிக்க வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் |
“வி.ஐ.பி. தொகுதிகளில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்?” - வெளியான தகவல்! [Saturday 2025-12-20 07:00]
![]() தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலைச் |
69,944 வீடுகளுக்கு இன்னும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை! [Sunday 2025-12-21 06:00]
![]() 'டித்வா' புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார் |
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதியை 31ஆம் திகதிக்குள் வழங்க உத்தரவு! [Sunday 2025-12-21 06:00] அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது இந்த பணிப்புரையை விடுத்தார். இதன்போது, வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அத்துடன், வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளைச் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் எவரையும் கைவிடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதேநேரம், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதற்கான காணி அடையாளப்படுத்தல் மற்றும் புதிய வீட்டுத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன், அனர்த்தத்தின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
![]() அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். |












