புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்  உண்ணாவிரதம் 
தமிழகம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாகவே இலங்கையில் வடக்கில் உள்ள மீனவர்களின் வாழ்வதாரம் பாதிப்படைவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இயங்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உதவி காரியாலயத்துக்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ad

ad