புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
செய்யும் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி காமாட்சி (வயது-65). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.


இந்த நிலையில், வையாபுரி, அவரது மனைவி காமாட்சி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். காமாட்சிக்கும், அவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் கட்டடத் தொழிலாளி செல்வனுக்கும் (வயது-45) தவறான உறவு இருந்து வந்ததாகவும், இதனால், பலமுறை வையாபுரி தனது மனைவியைக் கண்டித்ததாகவும் தெரிகிறது.


இந்த நிலையில், திங்கள்கிழமை காலை செல்வனும், காமாட்சியும் தனிமையாக இருந்ததை வையாபுரி பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வையாபுரி அரிவாளால் தனது மனைவி காமாட்சியை வெட்டினார்.


இதைத் தடுக்க வந்த செல்வனையும் வெட்டினார். ஆனால், செல்வன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த காமாட்சியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், வெட்டுக் காயம் அடைந்து தப்பியோடிய செல்வன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வையாபுரி மீது வழக்கு பதிவு செய்த மோகனூர் போலீசார் நேற்று வையாபுரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ad

ad