புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 2 வாரத்திற்கு
மேல் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் 26 உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் இந்த நிமிடம் வரை எந்த பலனும் கிடைக்கவில்லை. விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகளின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வரும் மலேசிய அதிகாரிகளின் கவனம், மீண்டும் விமானி சகாரி அகமது ஷா மீது திரும்பியது.
அவரது வீட்டில் கிடைத்துள்ள சில ஆதாரங்கள், அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. விமானியின் வீட்டை முதலில் ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலே பறப்பது தொடர்பான பயிற்சிக்கு உரிய கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கருவியை ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகி இருந்த சில தகவல்கள் கடந்த பிப்ரவரி 3–ந் தேதி அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே விமானம் மாயமான சம்பவத்தில் விமானிக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் விமானம் கடந்த 7ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி சகாரி அகமது ஷா மர்ம பெண்ணிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை அதிகாரிகள் யார் கடைசியாக விமானியுடன் பேசினார்கள் என்பதை கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர் என்று செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து விமானத்தை விமானியே கடத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் விமானி சகாரி அகமது ஷாவின் மனைவியிடம் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. விசாரிக்க உள்ளது. விமானியின் மனைவி பைசாக் கான் எப்.பி.ஐ. விசாரணையை எதிர்க்கொண்டுள்ளார் என்று டெய்லி மிரோர் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா புலனாய்வு துறையினர் மற்றும் மலேசிய போலீஸ் அதிகாரிகள் விமானி மற்றும் அவரது மனைவியின் பின்னணி என்ன என்பதை விசாரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad