வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
ஆதரவு திரட்டும் வகையில் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஸ்ண ஒழுங்கையில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டம் ஒன்று இன்று ( 24.03 2014) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
ஆதரவு திரட்டும் வகையில் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஸ்ண ஒழுங்கையில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டம் ஒன்று இன்று ( 24.03 2014) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதில் முதலில் உரையாற்;றிய மனோ கணேசன்ää வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் இந்த கூட்டத்துக்கு வரப்போகிறார் என்பதே இன்று செய்தியாகியிருந்தாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய சி வி விக்னேஸ்வரன்ää வடக்கில் தேர்தல் நடந்த போது அங்குள்ள மக்கள் தமது வாக்கு பலத்தை காட்டியதாக குறிப்பிட்டார்.
வாக்குகள் உள்ளவர்கள் அனைவரும் குறிப்பாக பெண்கள் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் என்று தாம் அதன்போது கேட்;டுக்கொண்டதாக விக்னேஸ்வரன் கூறினார்.
அதற்கமைய வடக்கு மக்கள் தமக்கு உறுதியான வெற்றியை தந்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எனவே மேல்மாகாணத்தின் தமிழ் பேசும் மக்களும் இனபேதமின்றி இயங்கிவரும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
போர்க்காலத்தில் காணாமல் போதல் உட்பட்ட பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வேளையில் மனித உரிமைப் போராளியாக மனோ கணேசன் செயற்பட்டார் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.