தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.கவை வீழ்த்த வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்
உதயகுமாரை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் செய்தார். இதற்காக திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகேயுள்ள அங்குவிலாஸ் மைதானத்தில் பிரசார கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
இதில், பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது. மத்தியில் அங்கம்வகித்த தி.மு.க முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என திமுக கூறுவது ஏமாற்றும் செயல் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.கவை வீழ்த்த வேண்டும. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.