பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிற்காக கொழும்பில் பாடசாலைகளிற்கு விடுமுறை
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதற்காக தலைநகர் கொழும்பில்
அமைந்துள்ள 31 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இன்றைய தினம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இந்த விடுமுறையானது நவம்பர் மாதம் 6ம் திகதி
முதல் 19ஆம் திகதிவரை அமுல்ப்படுத்தப்படும் என தெரியவருகின்றது.குறிப்பாக கொழும்பில் உள்ள ஆனந்தா நாலந்தா
ரோயல் விசாகா தேர்ஸ்டன் உட்பட 31 பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.