புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014

மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட சவால்

சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார்.
மும்பைக்கெதிரான ஆட்டத்தில் அஸ்வின் ரவுண்ட் தி விக்கெட் உத்தியை அதிகம் பயன்படுத்தி சிக்கனமாக வீசியதோடு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் விக்கெட்டை முக்கியக் கட்டத்தில் வீழ்த்தினார்.
மேலும் மைக் ஹஸ்ஸி மற்றும் சிம்மன்ஸ் ஆகியோரையும் தனது மாறுபடும் பந்து வீச்சினால் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு போட்டியில் அஸ்வினின் பந்துகளை வானவேடிக்கையாக பறக்க விட்டார் மேக்ஸ்வெல். இதைத் தொடர்ந்து அஸ்வின், அடுத்தப் போட்டியில் ஓவர் தி விக்கெட் யுக்தியை பயன்படுத்துவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம் என சவால் விட்டார்.
அதே போல் நேற்றைய பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியை தொடங்கிய மேக்ஸ்வெல் 13 ஓட்டங்கள் இருந்த போது அஸ்வினின் பந்து வீச்சில் சரிந்தார். இதனையடுத்து அஸ்வின் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

ad

ad