புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

ஐ நபேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐ நா உள்ளே புக முயற்சி காவல்துறை தடுப்பு முறுகல் நிலை

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது
இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க முடிந்ததுடர்ச்சியாக ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறான முறுகல் நிலை தொடந்து பின்னர் பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஐ.நா முன்றலில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ உணர்வுடன் ஆரம்பமானது பேரணி
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப் பேரணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
3ம் இணைப்பு
ஐ.நா முன்றலில் பேரணிக்காரர்கள் பொலிசார் இடையில் முறுகல்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல்துறையினருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது
இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க முடிந்தது.
தொடர்ச்சியாக ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறான முறுகல் நிலையை தொடர்ந்து, பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad