புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

ஊர்காவற்றுறையில் குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணம்!

உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்று குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகினர். இந்தச் சம்பவம்
நேற்று மதியம் ஊர்காவற்றுறை - நாரந்தனையில் இடம்பெற்றுள்ளது. இதில் டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன் (வயது 8) ஆகிய சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர். ஒன்றுவிட்ட சகோதரர்களான இவர்கள் முற்பகல் 11 மணியளவில் உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
   
பிற்பகல் 2.30 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அருமைக்குட்டி குளத்தில் இறந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மிதந்தன. இதன்பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

ad

ad