புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2016

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வழக்கு தவணைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

ad

ad