புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2016

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்: கடிவாளம் போட்டது உயர் நீதிமன்றம்!

கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக கிராமப்பகுதிகளில் நிகழும் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் வழக்கம் பாரம்பர்யமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலங்களில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச பாடல்கள், நடனங்கள் குத்துப்பாட்டுக்கள் என அரங்கேறிவருகின்றன. இதனால்  தற்போது ஆடல், பாடலுக்கு போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடி களை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழும் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தர விடக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, கோயில் விழாக்களில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார். 

ஆடல், பாடல் நிகழ்ச்சியை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும். எந்தவிதமான ஆபாச நடனமோ, ஆபாச வசனங்களோ இடம் பெறக் கூடாது. மது போதையுடன் வருவோரை அனுமதிக் கக் கூடாது, மாணவர்களின் மனதைக் கெடுக்கும் விதமான இரட்டை அர்த்தப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம், ஜாதி சார்ந்த பாடல்கள், நடனம் இடம்பெறக் கூடாது. கட்சி, மதத் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.  மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக் கூடாது. 

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டாலோ, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டாலோ போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்போது, இந்த அனைத்து நிபந்தனைகளையும் குறிப்பிட்டு போலீஸார் எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ad

ad