புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

Posted Date : 14:55 (03/06/2016) விஜயபாஸ்கருக்கு 'செக்' வைத்த கார்டன்! -M.S.வைரமுத்துவைத் தேடி வந்த வாரியப் பதவி

சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில் இருந்து, சென்னை பக்கமே வராத புதுக்கோட்டை மா.செ வைரமுத்துவுக்கு வீட்டுவசதி
வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான முதல் அதிரடி இது' என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

அ.தி.மு.க அரசின் அமைச்சரவை பதவியேற்றதும், ‘வாரியத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கப் போகிறது?’ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நேற்று முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், சம்பந்தமே இல்லாமல் வீட்டு வசதி வாரியத்திற்கு மட்டும், திருமயம் தொகுதியில் தோற்ற வைரமுத்துவை நியமித்தது அ.தி.மு.கவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேறு எந்த வாரியத்திற்கும் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. இத்தனைக்கும் தேர்தலில் தோற்ற நாளில் இருந்தே புதுக்கோட்டைக்குள் முடங்கிக் கிடந்தார் வைரமுத்து.
நேற்று கார்டனில் இருந்து அவருக்கு திடீர் அழைப்பு. கை, கால் உதறலோடுதான் கார்டனுக்குள் நுழைந்தார் வைரமுத்து. அதற்குள் புதுக்கோட்டை மாவட்டம் முழுக்கவே, ' மீண்டும் விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கப்போகிறது. வைரமுத்து பதவியைப் பிடுங்கி அனுப்பப் போகிறார் அம்மா' என்ற தகவல் தீயாய் பரவியது. சில மணி நேரங்களில், ‘ வீட்டு வசதி வாரியத் தலைவராக வைரமுத்து நியமனம் செய்யப்பட்டத் தகவல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக, அதிர்ந்து போய்விட்டார் விஜயபாஸ்கர்’ என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதற்கு முழுக் காரணமே அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முத்தரையர் சமூகத்தினரின் கொந்தளிப்புதான்.  ‘ அமைச்சர் ஜாதியைச் சொல்லித் திட்டினார்’ எனப் புகார் கூறிய சொக்கலிங்கம், புதுக்கோட்டையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,973 வாக்குகள் வாங்கினார். முத்தரையர் வாக்குகளை வெகுவாகப் பிரித்தார் சொக்கலிங்கம். இதற்கு முழுக் காரணமே விஜயபாஸ்கரின் செயல்பாடுகள்தான். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.கவின் கார்த்திக் தொண்டைமான் தோல்வி அடைந்தார்.
இதை முன்கூட்டியே உணர்ந்துதான், முத்தரையர் சமூகம் அதிகளவில் இல்லாத விராலிமலையில் போட்டியிட்டு வென்றார் விஜயபாஸ்கர். தேர்தலில், திருமயம் தொகுதியில் போட்டியிட்ட வைரமுத்து, வெறும் 766 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவின் ரகுபதியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘ வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார்’ என்பதால், அவரைத் தோற்கடிக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் செய்தார் விஜயபாஸ்கர். இதைப் பற்றி கார்டனின் கவனத்திற்கு முழு விவரங்களுடன் அறிக்கை அனுப்பினார் வைரமுத்து. மேலிடமும் தீவிர விசாரணை நடத்தியது. மீண்டும் அமைச்சராக விஜயபாஸ்கர் வந்ததுமே, ‘ மா.செ பதவியை வாங்கிவிடுவேன்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள், வைரமுத்துவுக்கு திடீர் பதவி கொடுத்து, விஜயபாஸ்கருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது கார்டன்" என்றார் அவர். 

“ அது மட்டுமல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேரடியாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தவர் வைரமுத்து. பல ஆண்டுகளாக கார்டனின் குட்புக்கில் இருப்பவர். கடந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து கொண்டு விஜயபாஸ்கர் செய்த சில வேலைகளால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் சின்னம்மா. மணல் விவகாரம் உள்பட குவாரி விஷயங்களில் விஜயபாஸ்கரின் அதீத வளர்ச்சி, கட்சிக்காரர்களை அதிர வைத்தது. எந்தக் கட்சிக்காரரையும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
முத்தரையர் சமூகத்தினரின் கடும் அதிருப்தியால்தான் கழக வேட்பாளர்கள் இங்கு தோல்வியைத் தழுவினர். இதையும் தாண்டி விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இப்போது புதுக்கோட்டை என்றாலே வைரமுத்து மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியோடு வாரியத் தலைவர் பதவியையும் கொடுத்துவிட்டார் அம்மா. இனி படிப்படியாக விஜயபாஸ்கர் கட்டம் கட்டப்படுவார்” என்கிறார் புதுக்கோட்டை அ.தி.மு.க சீனியர் ஒருவர். 

மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நல்வாழ்வுத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு, கார்டன் அளித்த இந்த ‘திடீர்’ சிகிச்சையை அதிசயத்தோடு கவனிக்கிறார்கள் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

ad

ad