புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு
வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரி ஜே.வி.பி இன் பிரசார செயலா ளர் விஜித ஹேரத் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை கொழும்பு மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ளப்படவுள்ளது.

ad

ad