புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2017

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் சமூக த்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில், புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலை மையில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்ற தேவராஜா ஜெகதீபன் , றங்கசாமி நந்தகுமார் , யோசப் டின்டாஸ் விவிலியன் , கணேசன் துசா ந்தன் ஆகியோரே சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு பெற்ற இந்த நான்கு பேரும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, நிலையப் பொறு ப்பதிகாரி பிரியந்த குணசேகர,புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பொலிஸ் நிலைய பொறுப்பதி காரி சமயத் தலைவர், முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிஸார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad