புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2017

விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! - ஐ.நா குழு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒழிக்கும் குழு கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் பக்கச்சார்பற்ற சுயாதீன நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பிலான ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad