புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2018

நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த
பெரு­ விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது.
நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். 
இப்பெரு­விழாத் திருப்­ப­லியில் இந்­தி­யாவின் சிவ­கங்கை மறை­மா­வட்ட குரு­மு­தல்வர் தலை­மையில் அருட்­தந்­தை­யர்கள், அருட்­ச­கோ­த­ரிகள் கலந்­து­கொள்­ளவுள்ளனர். அத்­துடன் இந்­தி­யா­வி­லி­ருந்து 3 ஆயி­ரத் துக்கும் மேற்­பட்ட யாத்­தி­ரிகர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் இந்­திய யாத்­தி­ரிகர்கள் சார்பில் கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்­கான கொடி­மரம் அங்­கி­ருந்து எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ள­தாக நெடுந்தீவு பங்குத்தந்தை எமில்போல் அடிகளார் தெரிவித்தார்.
கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய பெரு­வி­ழா­வுக்கு இம்­முறை இலங்கை மற்றும் இந்­திய நாடு­க­ளி­லி­ருந்து 10 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதற்கு ஏற்­ற­வ­கையில் போக்­கு­வ­ரத்து மற்றும் அத்­தி­யா­வ­சிய விசேட ஏற்­பா­டுகள் என்­பன அங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.
யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்கு செல்­வ­தற்கு வச­தி­யாக யாழ்.மத்­திய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து 23ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 3.30 மணி­யி­லி­ருந்து குறி­காட்­டுவான் இறங்­கு­து­றைக்கு பேருந்து சேவைகள் இடம்­பெறும். இதற்கு மேல­தி­க­மாக தனியார் பேருந்து போக்­கு­வ­ரத்து சேவை­களில் ஈடு­­படும். அன்­றைய தினம் காலை 5 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 2 மணிவரை குறி­காட்­டுவான் இறங்­கு­து­றை­யி­லி­ருந்து கச்­ச­தீ­வுக்­கான கடல்­வழி படகுச் சேவைகள் இடம்­பெறும். 
படகுச் சேவைக்­கான ஒரு­வழி கட்டண­ மாக குறி­காட்­டு­வானிலிருந்து 300 ரூபாவும் நெடுந்­தீவில் இருந்து கச்­ச­தீ­வுக்கு ஒரு­வழி பயணக் கட்­ட­ண­மாக 225 ரூபாவும் அற­வி­டப்­படும். சேவையில் ஈடு­படும் பட­குகள் யாவும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே சேவைக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள் ­ளது. பய­ணி­களின் பாது­காப்புக் கருதி பாது­காப்பு அங்­கியை அணி­வது  கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.
திரு­வி­ழா ஒழுங்­கு­க­ளுக்­கு­ரிய பிர­தான பொறுப்பை கடற்­ப­டை­யினர் ஏற்­றுள்­ளனர். அதேபோன்று ஏனைய துறை­யினர் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டதன்படி தத்­த­மது சேவை­களை மேற்­கொள்­வார்கள். பக்தர்­ களின் நலன்­க­ருதி நிரந்­தர மல­சலகூட வச­திகள் மற்றும் மேல­தி­க­மாக தற்­கா­லிக மல­சலகூட வச­திகள் என்­ப­னவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.
கச்­ச­தீவு திருத்­தல திரு­வி­ழா­வுக்கு வரும் யாத்­தி­ரி­கர்கள் தமக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை தாமே எடுத்து­ வர வேண்டும் எனவும் அறி­வு­றுத்­தப்பட் ­டுள்­ள­துடன் கச்சதீவு பிரதேசத்தில் பொலித் தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் போது கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad