புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

ஊழல்வாதிகளை பாதுகாக்க மாட்டேன்! - ஜனாதிபதி

மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிப் பதவிக்கு வந்து, அரசனொருவனிடம் காணப்பட்ட ஜனாதிபதி அதிகாரங்களை நீக்கினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் நம்பிக்கையை பாதுகாத்து கடந்த 2015 ஜனவரி 08ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிப் பதவிக்கு வந்து, அரசனொருவனிடம் காணப்பட்ட ஜனாதிபதி அதிகாரங்களை நீக்கினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாம் கடந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராக நின்றோம். தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறோம். நான் ஒருபோதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதில்லை. அதுபோன்று முடியுமென்றால் நாம் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட அபிவிருத்திகள் குறித்த விவாதமொன்றுக்கு வருமாறு நான் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றேன். நாம் பழிவாங்கும் எண்ணங்களுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை. ஊழல்களுக்கு இடமளிப்பதில்லை. கிராமத்தையும் நகரத்தையும், நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது ஓரே குறிக்கோளாகும். அத்துடன் தூய்மையான ஆட்சியையும், புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த முறையும் தன்மீது நம்பிக்கை வைத்து ஊழல், மோசடி, வீண்விரயம், குடும்ப ஆதிக்கமற்ற தூய அரசியல் கலாசாரமொன்றை தோற்று விப்பதற்கு ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ad

ad