புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2018

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரியும், இறுதிப் போர் நடந்த முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது.
முள்­ளி­வாய்க்­கால் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், சுகிர்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரியும், இறுதிப் போர் நடந்த முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது. முள்­ளி­வாய்க்­கால் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், சுகிர்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்களும் காணப்பட்டன.



சிரியப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­ முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இன்று முல்­லைத்­தீ­வு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்­டங்கள் இடம்­பெ­ற்றன.

ad

ad