நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தரப்பினரின் பங்குபற்றலின்றி நாடாளுன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமை பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 500 பொலிஸாரும், இரண்டு கலகம் அடக்கும் பொலிஸ் குழுவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.