புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2019

ஸ்ரீ.ல.சு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் மறுசீரமைப்பு பணிகளின் கீழ் இந்தப் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
இதற்கமைய, பதுளை மாவட்டம்- நிமல் சிறிபால டீ சில்வா, கண்டி- எஸ்.பீ. திசாநாயக்க, ஹம்பாந்தோட்டை- மஹிந்த அமரவீர, களுத்துறை- மஹிந்த சமரசிங்க, குருநாகல் – தயாசிறி ஜயசேகர, அநுராதபுரம்- துமிந்த திசாநாயக்க, கேகாலை- ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கம்பஹா- லசந்த அழகியவன்ன,மாத்தளை- லக்ஸ்மன் வசந்த, கொழும்பு- திலங்க சுமதிபால, காலி- ஷான் விஜயலால் டீ சில்வா, மாத்தறை- டீ.விஜய தஹாநாயக்க, அம்பாறை- ஸ்ரீயானி விஜேவிக்ரம, மட்டக்களப்பு- எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு தமிழ்பிரதிநிதிகளின் தலைவராக குணரத்னம் ஹரிதரன், யாழ்/கிளிநொச்சி- அங்கஜன் ராமநாதன், வன்னி- காதர் மஸ்தான், நுவரெலியா- டபிள்யு.ஜீ. ரணசிங்க, இரத்தினபுரி- அத்துல குமார ராஹுபத்த, திருகோணமலை- ஆரியவதி கலப்பதி ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad