புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2019

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய இம்மூன்று எம்.எல்.ஏக்களும் அமமுகவில்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) பொறுப்பில் இருப்பதாகவும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும் புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சபாநாயகர் 3பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

ad

ad