புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

மோதகத்துக்குள் அட்டை! - அதிர்ச்சியடைந்த மாணவன்

யாழ்ப்பாணம், சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணி – சங்கானை பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் மோதகம் வாங்கிக் கொடுத்தனர்.
யாழ்ப்பாணம், சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணி – சங்கானை பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் மோதகம் வாங்கிக் கொடுத்தனர்.

குறித்த மாணவன் அதை முன்பள்ளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உள்ளே அட்டை இருந்துள்ளது. அதை எடுத்து வெளியே எறிந்த மாணவன் இது தொடர்பாக ஆசிரியையிடம் கூறியுள்ளான். ஆசிரியை, மதியம் மாணவனை அழைத்துச் செல்ல வந்த பெற்றோரிடம் விடயத்தை தெரியப்படுத்தினார்.நேரே குறித்த உணவகத்திற்குச் சென்ற பெற்றோர் இது தொடர்பாகக் கேட்டனர். தாங்கள் உணவகத்தில் மோதகம் அவிப்பதில்லை எனவும் வேறு நபர்களிடம் எடுத்தே விற்பனை செய்வதாகவும் உணவக உரிமையாளர் கூறினார்.

இதுபோன்று சில சம்பவங்கள் தொடர்பாக முன்னரும் சிலர் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர் எனவும், இனிமேல் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதிக்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

ad

ad