முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், நினைவுக்கல் காணாமல் போயுள்ளது.
நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு பாரிய நினைவுக்கல் ஒன்று அங்கு இறக்கி வைக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த நினைவு சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.