கலப்பு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சிறுபான்மை கட்சிகள் விகிதாசார முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இந்நிலையில் விகிதாசார முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |